சபரிமலை: நவ.1 முதல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

வெர்ச்சுவல் க்யூ ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்கும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை
சபரிமலை
Published on
Updated on
1 min read

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்திற்கான வெர்ச்சுவல் க்யூ ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்கும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு சபரிலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் 90 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசம்போர்டு தெரிவித்துள்ளது.

மண்டல பூஜைக்காக நவம்பர் 16 கோயில் நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது. சபரிமலை மகரஜோதி தரிசனம் ஜன.14ல் பொன்னம்பல மேட்டில் காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Summary

The Devaswom Board has announced that virtual queue online booking for the Mandala and Makara Vilukku Puja periods at Sabarimala will begin from November 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com