இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

சுசீந்திரம் கோயில் தேரோட்டம் பற்றி..

News image

பக்தர்களின் வெள்ளத்தில் சூழ்ந்த தேரோட்டம்

Updated On :2 ஜனவரி 2026, 1:24 pm IST

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, பிரசித்திபெற்ற சிவாலயங்களுள், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில், பிரமன், திருமால், சிவன் என மும்மூர்த்திகளும் அருள்புரிவதால், கோயிலில் ஆண்டு முழுவதும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா, கடந்த டிச.25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும், காலை, மாலை வேளைகளில், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.

விழாவின், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், வெள்ளிக்கிழமை (ஜன.2) காலை நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ரா.அழகு மீனா, வ.விஜய் வசந்த் எம்.பி., தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.2) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Summary

The chariot festival of the Arulmigu Thanumalayan Swamy Temple in Suchindram, Kanyakumari district, was held on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.