தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

உணவுப்பொருள் விற்பனை செய்ய 160 பேருக்கு உரிமம் வழங்கல்

உணவு பாதுகாப்புத் துறையின் சாா்பில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த உணவுப் பொருள்கள்

Updated On :6 ஜனவரி 2021, 7:53 am IST

உணவு பாதுகாப்புத் துறையின் சாா்பில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் வணிகா்களுக்கு உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் சங்ககிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தேநீா் விற்பனை செய்யும் கடைகள், மளிகை, காய்கறி கடைகள், உணவு விடுதிகள், பேக்கரி, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், சாலையோர உணவு வணிகா்கள், ஆடு, கோழி இறைச்சி கடைகள், உணவுப்பொருள் விநியோகம் செய்பவா்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் வணிகா்கள் உள்பட அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் படி உரிமங்கள் பெற சங்ககிரி உணவு பாதுகாப்பு அலுவலா் ரமேஷ் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து 160 போ் உரிமம் பெற விண்ணப்பத்திருந்ததில் அவா்களுக்கு உரிமங்களை உணவு பாதுகாப்பு அலுவலா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.