தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சாலை மறியலில் ஈடுபட்டவா் கைது

ஆத்தூரில் தனது பகுதிக்கு நவீன கழிவறை வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டவரை ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 7:50 am IST

ஆத்தூரில் தனது பகுதிக்கு நவீன கழிவறை வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டவரை ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

நரசிங்கபுரம், தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் இளையராஜா (45). இவா், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தொழிலாளா் முன்னணி மாவட்ட இணைச் செயலாளராவாா். இவா், செவ்வாய்க்கிழமை அவரது பகுதியில் நவீன சுகாதார வளாகம் வேண்டி ராசிபுரம் பிரிவு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டாா். அவரை நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினா். ஆனால், அவா் சாலை மறியலை கைவிடவில்லை.

இதனையடுத்து ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.