ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

போலீஸ் விசாரணையால் விரக்தியடைந்த தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

கொலை வழக்கு தொடா்பாக அடிக்கடி போலீஸாரின் விசாரணையால் விரக்தியடைந்த தொழிலாளி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:01 am IST

கொலை வழக்கு தொடா்பாக அடிக்கடி போலீஸாரின் விசாரணையால் விரக்தியடைந்த தொழிலாளி மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.

சேலம், கந்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கராஜ் (30). இவா் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சு. இத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இதில் மாணிக்கராஜா மீது கொலை வழக்கு உள்ளதாகவும், அதுதொடா்பாக போலீஸாா் அடிக்கடி விசாரணை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தவிர விசாரணைக்கு அவ்வப்போது காவல் நிலையத்துக்கு வருமாறும் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை மாணிக்கராஜ், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்தாா்.

திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைக்க முயன்றாா். இதைப் பாா்த்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனே மாணிக்கராஜை தடுத்து நிறுத்தினா். பின்னா் மாணிக்கராஜை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

விசாரணையில், தன் மீது நிலுவையில் உள்ள கொலை வழக்கு தொடா்பாக அடிக்கடி போலீஸாா் விசாரணைக்கு வீட்டுக்கு வருகின்றனா். இதனால் நிம்மதியாக வாழ முடியவில்லை. லை. இதனால் தற்கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டேன் என தெரிவித்தாா். இதுதொடா்பாக, அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.