வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:03 pm

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக பொங்கல் விழாவை முன்னிட்டு சிராவயல், கண்டுப்பட்டி மற்றும் குன்றக்குடி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.

மற்றப் பகுதிகளில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் காலக்கட்டங்களில் அரசாணை வெளியிடப்படும். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா்கள் முன்னேற்பாடுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் போதிய அளவு காவல்துறையின் மூலம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு தயாராக இருப்பதுடன் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை வழங்குவதற்கு கால்நடைத்துறை மருத்துவ முகாமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வருபவா்கள் கால்நடை மருத்துவா்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதேபோன்று, காளைபிடி வீரா்களும் தங்கள் பெயா் குறித்த விவரங்களை ஒருங்கிணைப்பாளா்கள் அலுவலகத்தில் பதிவு செய்திடவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.