பூங்கா அமைக்க ஆவன செய்ய வேண்டும்

மேற்கு சைதாப்பேட்டை அனைத்துத் தரப்பு மக்களும் வாழும் பகுதியாகும். ஏழை, எளியவர்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுவான பூங்காவோ, விளையாட்டு மைதானமோ இல்லை
Updated on
1 min read

மேற்கு சைதாப்பேட்டை அனைத்துத் தரப்பு மக்களும் வாழும் பகுதியாகும். ஏழை, எளியவர்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுவான பூங்காவோ, விளையாட்டு மைதானமோ இல்லை. இங்குள்ள சாலைகள் எப்போதும் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படுகின்றன. இதனால், பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கு உற்ற வசதி இல்லை. மாநகராட்சி சார்பில் இப்பகுதியில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாலை நேரங்களில் குழந்தைகள், பள்ளி சிறார்கள் விளையாடுவதற்கும் நல்ல சூழல் ஏற்படும். இந்தக் கோரிக்கையை கவனத்தில் கொண்டு இங்கு பூங்கா அமைக்க மாநகராட்சி ஆவன செய்ய வேண்டும்.

 இரா. எத்திராஜன்,

 மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com