ஆதம்பாக்கம் பகுதியில் இன்டேன் எரிவாயு கொண்டுவரும் நபர்கள் சிலிண்டர் விலையைவிட ரூ.20-க்கும் அதிகமாக பணம் கேட்டுத் தொந்தரவு செய்கின்றனர். கேட்ட பணம் தரவில்லை என்றால், அடுத்தமுறை சிலிண்டர் எடுத்துவர காலதாமதம் செய்கின்றனர். சிலிண்டர் விலையிலேயே கொண்டுவரும் நபருக்குரிய கூலியும் அடங்கியுள்ளது. இதை சிலிண்டர் விநியோக ஏஜென்சிகள் கட்டுப்படுத்த வேண்டும்.