சென்னை காமராஜர் கடற்கரைச் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. மாடுகளால் கடற்கரையில் உள்ள புல் தரைகள் சேதமடைந்து அசுத்தமாக காணப்படுகின்றன. மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.