வில்லிவாக்கம் பஸ் நிலையத்தின் மதில் சுவரை ஒட்டி, நிறுத்தப்படும் மாநகராட்சி குப்பை வண்டிகளில்
எப்போதும் குப்பை சேமித்து வைக்கப்படுகிறது. இவற்றில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் பஸ் நிலையத்துக்குச் செல்லும் பயணிகளும், பஸ்ýக்காக காத்திருக்கும் பயணிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
குப்பைகள் தேங்கி வண்டியில் இருக்கும் போது அவைகளை மாடுகள், நாய்கள் கிளறி சாலையில் வீசுகின்றன.
இதனால் வடக்கு மாட வீதியில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பஸ் நிலையத்திற்கு அருகிலேயே விநாயகர் கோயில் உள்ளது. இதனால் பக்தர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த குப்பை வண்டிகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.