மடிப்பாக்கம் பிரதான சாலையானது பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு சீர்செய்யப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், சாலையில் சேறும் சகதியும் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.