குயப்பேட்டை கண்ணப்பன் தெருவில் அடிக்கடி சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
அதிலும், மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து விடுவதால் தெருக்களில் நடமாடவே முடியவில்லை.
சில வீடுகளில் சாக்கடை நீர் புகுந்து விடுவதால் அந்த வீடுகளில் வசிப்போர் வீடுகளை காலிசெய்து விட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இது குறித்து பலமுறை கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதைத் தடுக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.