புறநகர் எஸ்ஆர்பி, எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த இடத்தில் கழிவுநீர் ஓடையில் நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும், போதிய துப்புரவு பணியில்லாத காரணத்தால் கரப்பான் பூச்சிகள் போன்றவை அதிகம் காணப்படுகின்றன. இதனால், வாரம் ஒருமுறையாவது இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.