சென்னை 12ல் குயப்பேட்டை கண்ணப்ப முதலி தெருவில் அரசுக்கு சொந்தமான மதுக்கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் எந்நேரமும் குடிமகன்கள் மது அருந்திவிட்டு தெரு வீதியில் படுத்து விடுகின்றனர்.
இதனால் இந்த வழியாக பெண்கள் சென்று வர முடியவில்லை. மேலும் பள்ளி மாணவர்கள், பெண்கள் தினமும் இந்த வழியாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் நலன்கருதி மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.