சென்னை நகரின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் சாலையோரங்களில் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிகின்றனர். அவர்களை அரசு மனநல மையங்களிலோ, தனியார் காப்பகங்களிலோ சேர்த்து தகுந்த சிகிச்சை அளித்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். இதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுமா?