திருநின்றவூர்- கோமதிபுரம் மெயின் ரோடு அகலமானது. இந்தச் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இங்கு பள்ளிகள், மருத்துவமனைகள் இயங்கி வருவதால் எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.