வேளச்சேரியில் இருந்து கிண்டிக்கு ஆதம்பாக்கம், மஹாலஷ்மி நகர், என்ஜிஓ காலனி வழியாக தியாகராய நகருக்கு சிற்றுந்து செல்கிறது. ஆனால் தற்போது இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் அவசர கதிக்கு பயணிகள் ஷேர் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிக கட்டணம் கொடுத்து செல்லும் இப்பகுதி மக்களின் நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் சிற்றுந்துகளை இதே வழித்தடத்தில் இயக்க வேண்டும்.