குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தாம்பரம் மார்க்கத்தில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பஸ் நிலையத்தின் பெயர் குரோம்பேட்டை பஸ் நிலையம் என இருக்க வேண்டும்.
இதற்கு பதிலாக பல்லாவரம் பஸ் நிலையம் என தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் பல்லாவரத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் பெயர் குழப்பத்தால் குரோம்பேட்டையில் இறங்கி ஏமாற்றமடைகின்றனர்.
இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.