அம்பத்தூரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தையொட்டி நீதிமன்ற வளாகம் உள்ளது. இது 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மோசமான நிலையில் உள்ளது.
பூந்தமல்லி, ஆலந்தூர், தாம்பரம் பகுதியில் புதிதாக நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது போல அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படவேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.