சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால், சாலையில் மழை வெள்ளம் தேங்குகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதைப் போலவே இங்குள்ள ரேஷன் கடையை விரிவுபடுத்தவேண்டும். மேலும் இங்குள்ள கழிவுநீர்க் கால்வாயைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.