கிண்டி ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதியில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகளின் நலன்காக்க மாநகராட்சி மேயர், வார்டு உறுப்பினர், தன்னார்வலர்கள் இங்கு நிழற்குடை அமைக்க முன்வர வேண்டும்.