திருவொற்றியூரிலிருந்து தியாகராயநகர், மேற்கு மாம்பலம், அய்யப்பன் தாங்கல், கே.கே.நகர், மாங்காடு, திருவல்லிக்கேணி போன்ற பல இடங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. கட்டணம் அதிகம் உள்ள இரண்டு சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக வெளியிடங்களுக்கு செல்ல பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மேற்கண்ட பகுதிகளில் இருந்து திருவொற்றியூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.