திருவொற்றியூர் சன்னதி தெருவில் அகத்தீசுவரர், தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இதில், வடிவுடையம்மன் கோயில் அருகே குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தில் இப்போது தண்ணீர் இல்லை. இதனால், இந்தப் பகுதியில் உள்ளவர்கள் இந்தக் குளத்தில் குப்பைகள் கொட்டுகின்றனர். மேலும், கோயில் வீதியில் சிலர் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் கோயிலைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுகாதார சீர்கேட்டால் பொதுமக்களும், பக்தர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.