சென்னை மாநகராட்சியுடன் பல புறநகர்ப் பகுதிகள் இணைக்கப்பட்டாலும், அந்தப்பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஏற்கெனவே புழுதிவாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளில் போடப்பட்ட பாதாளச் சாக்கடைக்கு இன்னும் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பம்பிங் நிலையம் அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறதாம். திட்டப்பணிகளை தாமதப்படுத்துவதால், அதற்கான செலவு அதிகமாகிவிடுகின்றன. எனவே மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் திட்டப்பணிகளை துரிதமாக நிறைவேற்ற வேண்டும்.