சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட வளசரவாக்கம் பகுதியில் பாதாளச் சாக்கடை கட்டணம் நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் முரண்பாடு நிலவுகிறது. சொந்த கட்டடத்தில் சிறிய கடை நடத்தி வருபவர்களுக்கு பாதாளச் சாக்கடை கட்டணமாக மாதம் ரூ.600 வசூலிக்கிறார்கள். அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்தால் ஆண்டுக்கு மிகவும் குறைவாகக் கட்டணம் செலுத்தினால் போதும் எனக் கூறுவதாக தெரிகிறது. எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் வணிக கட்டடங்களை ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த முரண்பாடுகளை நீக்கி,உண்மையான கட்டணம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.