மடிப்பாக்கம் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வேலை நிமித்தமாக வெளியிடங்களுக்கு செல்பவர்கள், இரவில் வீட்டுக்குத் திரும்பும்போது தெரு நாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சத்துடனே செல்லவேண்டியுள்ளது. எனவே சென்னை மாநகராட்சி புதிய உத்தியைக் கையாண்டு தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.