புதிய ஆவடி சாலை அயனாவரம் வாட்டர் டேங்க்கை அடுத்த கங்கையம்மன் கோயில் எதிரே உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே போக்குவரத்து காவலரை நியமிக்க கோரி தினமணி நாளிதழில் கடந்த 1.8.2016 அன்று ஆராய்ச்சிமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறையினரின் நடவடிக்கையால் இந்தப் பள்ளி அருகே தற்போது போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்த தினமணி நாளிதழுக்கும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் பெற்றோர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.