சேத்பட் மேயர் ராமநாதர் சாலை முடிவில் சிக்னல் அருகே வழித்தடம் தொடர்பான பெயர் பலகையில் பெயர்கள் எழுதப்படாமல் இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக தினமணி நாளிதழில் ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் புதிதாக பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் இந்தப் பகுதி பொதுமக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பி.விஜயகுமார், எழும்பூர்.