அண்ணா நகர், மேற்கு விரிவாக்கம், திருமங்கலம், பள்ளிச் சாலையின் பிரதான கேட், மேற்கு வாசல் சாலை, தெற்கு வாசல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை நாய்கள் விரட்டுகின்றன. மேலும், இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் விரட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. தெரு நாய்களால் இந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.