மேற்கு சைதாப்பேட்டை தொடங்கி மேட்டுப்பாளையம், சிஐடி நகர், தியாகராய நகர், எழும்பூர் வழியாக டோல்கேட் வரை செல்லும் தடம் எண் 10ஏ பேருந்துகள் மிகவும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால், வேறு வாகனங்களை நாட வேண்டியுள்ளது. பயணிகளின் நலனுக்காகவும், வருவாய் ஈட்டும் வகையிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்குமா?
-இரா.எத்திராஜன், சைதை மேற்கு.