அமைந்தகரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அஞ்சல் துறையின் தபால் பெட்டி, மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. இதனை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கடந்த மாதம் 20-ஆம் தேதி ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த தபால் பெட்டி சரிசெய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தினமணி நாளிதழுக்கும், அஞ்சல் துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.