விரிவாக்கப்பட்ட சென்னை பெருமாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில், ஒரு வார்டுக்கு சராசரியாக 40 சாலை விளக்குகள் வீதம், 8,000-க்கும் மேற்பட்ட விளக்குகள் எரியாமல் உள்ளன. இதுதொடர்பாக மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. பகுதி மின்வாரிய அதிகாரியோ, மண்டல அதிகாரியோ இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சென்னை மாநகராட்சியின் மேயரோ, ஆணையரோ வாரம் ஒரு மண்டலம் வீதம் ஆய்வு மேற்கொண்டு, எரியாத சாலை விளக்குகள் ஒளிவீச வழிவகை செய்ய வேண்டும்.