திருவொற்றியூர் பேருந்து நிலையம் பின்புறம் ரயில்வே பாலம் உள்ளது. இதைக் கடக்க குறுகிய அகலம் கொண்ட சுரங்கப் பாதை உள்ளது. இந்தச் சுரங்கப் பாதையில் அவ்வப்போது கழிவுநீர் தேங்குகிறது. இதனால், பாலத்தின் தூண்கள் சேதமடைந்து வருகிது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சுரங்கப் பாதையை அகலப்படுத்தவோ அல்லது மேம்பாலம் அமைக்கவோ ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.