சென்னை 106 வட்டம், ஈசாக் கார்டன் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் பாதையில் அதிகளவு குப்பை சேருகின்றன. இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதியில் குடியிருப்போர் கோயில் வளாகம் அருகே குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சேகரமாகும் குப்பை அவ்வப்போது அகற்றப்படுவதில்லை. நோய்த் தொற்று ஏற்படும் முன் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.