சென்னை அடையாறு இந்திரா நகரிலிருந்து வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் கோயம்பேடு பேருந்து முனையத்துக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. நகரின் போக்குவரத்து நெரிசலால் இவ்வாறு வந்துசெல்ல காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, அடையாறு பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வெளியூர் பேருந்துகளை இயக்க வேண்டும்.