சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக ஆவடி பகுதியில் இந்தப் பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இங்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது லாரிகள் சரியாக வருவதில்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். முறையாக குடிநீர் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.