அம்பத்தூர், கள்ளிகுப்பம் சாலை, வடக்குப் பூங்கா தெரு, தெற்கு பூங்கா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் அருகே மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இந்த மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது படுவதால் மின்கசிவு ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏராளமான வீடுகள் இந்தப் பகுதிகளில் உள்ளதால் மின்கசிவு ஏற்பட்டால் பெரும் விபத்து ஏற்படும். எனவே, ஆபத்தை ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை தேவை.