ஆவடி காமராஜர் நகர் நெடுஞ்சாலை ஹெச்டிஎஃப்சி வங்கி எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண் 8731) மாலை நேரங்களில் கூட்டம் வழிவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைக்குச் செல்லும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை காலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், வாகன ஓட்டிகளும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதைப் போக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.நந்தகுமார், ஆவடி.