பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில் பிரதான சாலை, பெருமாள் கோயில் 4 -ஆவது குறுக்குத் தெரு, ஆதிராஜ் தெரு ஆகிய இடங்களில் பல மின்கம்பங்கள் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளன. இதுசம்பந்தமாக ஊர் மக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது, மழைக்காலம் தொடங்குவதற்குள் மணலி -சாத்தான்காடு மின் நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
ஆர். ராஜவர்மன், மணலி.