அண்ணாநகர் மேற்கு பகுதியில் கிழக்கு பிரதான சாலையில் உள்ள பஞ்சரத்னா காலனியில் பூங்கா பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
குழந்தைகள் விளையாட உள்ள விளையாட்டு உபகரணங்களும் சிதிலமடைந்து விட்டன. ஆகவே அவற்றைச் சீர்செய்து அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வீ.வீராங்கன், பாடி புது நகர்.