108-ஆவது வட்டம் என்.எஸ்.கே. நகர் பேருந்து நிறுத்தம் மிக அருகில் அமைந்துள்ள சிக்னல் விளக்குகள் எரிந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் எம்எம்டிஏ காலனியிலருந்து இருந்து பூந்தமல்லி-ஈ.வெ.ரா நெடுஞ்சாலையை நோக்கி வரும் வாகனங்களும், போயம்பேட்டிலிருந்து வந்து எம்எம்டிஏ காலனிக்கு வலது பக்கமாகத் திரும்பும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்தப் பிரச்னைகளைத் தடுக்க போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பழுது நீக்கவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ராமன், சென்னை-8