ஆவடி நகராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் பல ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் திரிகின்றன. இந்த நாய்களால் பொதுமக்கள் கடிபடுவது அன்றாட நிகழ்வாகிறது. இரவு வேலைக்குச் சென்றுவருவோர், பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. தெருநாய்களைப் பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.கனகவேல், ஆவடி.