சென்னை மாநகராட்சி மரம் வளர்க்க வேண்டும் என்று அறிவித்து வருகிறது. சிங்காரச் சென்னை என்ற பெயரில் மாநகராட்சி சாலைகள், தெருக்களின் ஓரங்களில் நடைபாதையும் மற்ற இடத்தில் தார்ச்சாலையாகவும் போடப்பட்டு வருவதால் சாலை, தெருக்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு இடமில்லை. சாலை, தெருக்களின் ஓரங்களில் 2 அல்லது 3 அடி விட்டு தார்ச்சாலை போடப்பட்டால் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடியும். மாநகராட்சி இது தொடர்பாகப் பரிசீலித்துச் செயல்பட வேண்டும்.
- சீனி.சேதுராமன், மடிப்பாக்கம்.