ஆராய்ச்சிமணி
குப்பையால் தொல்லை!
அனகாபுத்தூர் நகராட்சிக்குப் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் தினசரி குப்பையை எரிக்கின்றனர்.
அனகாபுத்தூர் நகராட்சிக்குப் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் தினசரி குப்பையை எரிக்கின்றனர். இந்த இடத்தைச் சுற்றி 250 குடியிருப்புகள் உள்ளன. குப்பைமேட்டில் இருந்து வரும் புகையால் குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, அந்த இடத்தில் குப்பைகளை எரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆர்.சண்முகம், அனகாபுத்தூர்.