நாங்கள் வசிக்கும் மணலி புதுநகரில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகக் கூறி, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே சி.எம்.டி.ஏ. நிர்வாகம் விற்பனை செய்தது. ஆனால், இன்று வரை, அதற்கான முயற்சிகளை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டும் ரயில் பாதை அமைக்கப்படவில்லை. மேலும், இந்தப் பகுதியில் அதிகமாக நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ரயில்பாதை அவசியமாகும். எனவே, அதற்கு ஆவன செய்ய வேண்டும்.
எம்.தட்சிணாமூர்த்தி, மணலி புதுநகர்.