சாலையில் சுற்றுத்திரியும் கால்நடைகளின் தொல்லை சென்னை மாநகரில் பல பகுதிகளில் தீராமல் உள்ளது. முன்பு மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளைப் பிடித்து பட்டிகளில் அடைத்து அபராதம் விதித்து உரிமையாளர்களைக் கடுமையாக எச்சரித்தார்கள். அதே முறையை மீண்டும் சம்பந்தப்பட்ட துறையினர் கொண்டு வந்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.