சென்னை பாடி முதல் திருநின்றவூர் வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ.96 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், பாடி முதல் திருநின்றவூர் வரையிலான சாலை, பல இடங்களில் நான்கு வழி பாதை அமைக்கப்படவில்லை. ஆனால், சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்தச் சாலையில் விபத்துகளும், நெரிசல்களும் அதிகளவில் நிகழ்கின்றன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையைத் தீர்த்து இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.குணசீலன், அம்பத்தூர்.