சென்னை அண்ணாநகரைச் சுற்றி வள்ளியம்மாள், கந்தசாமி, கிருஷ்ணசாமி, டி.ஜி.வைஷ்ணவா, அண்ணா ஆதர்ஷ் ஆகிய கல்லூரிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது மாதாந்திர பேருந்து பயணச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்காக அண்ணாநகர், அண்ணாநகர் மேற்கு பணிமனைகளை மாதந்தோறும் 1 முதல் 10-ஆம் தேதி தேதி வரை அணுகுகின்றனர். ஆனால் அவர்களை பிராட்வே பணிமனைக்குச் செல்லுமாறு பணிமனை ஊழியர்கள் அனுப்பி விடுகின்றனர். பிராட்வே பணிமனையிலோ, மீண்டும் அண்ணாநகருக்கே அணுப்பி விடுகின்றனர். இதனால், மாணவ மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள், இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டு அண்ணாநகர் மேற்கு பணிமனையிலேயே மாணவர்களின் மாதாந்திர பயணச்சீட்டுகள் புதுப்பிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.