திருவொற்றியூர் டி.எச். சாலையில் உள்ள மின் பகிர்மான பெட்டி குறித்து நான் எழுதிய கடிதம், "ஆபத்தான மின் பகிர்மானப் பெட்டி' என்ற தலைப்பில் 19.11.18 தேதியிட்ட நாளிதழில் வெளியானது. தற்போது, சாய்ந்திருந்த மின் பகிர்மான பெட்டியை நிமிர்த்தி, சிமெண்ட் பூசப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டது. கடிதத்தை வெளியிட்ட "தினமணி'க்கும், நடவடிக்கை எடுத்த பணியாளர்கள், அதிகாரிகளுக்கும் நன்றி!
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.