சென்னை அடையாறு பேருந்து நிலையம் அருகில் பெசன்ட் நகர் செல்லும் சாலைக்கு "மகாத்மா காந்தி சாலை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும், இன்றும் அங்குள்ள கடைகளில் சாஸ்திரி நகர் 2-ஆவது அவென்யூ என்றே எழுதி வருகிறார்கள். இதனால், இந்தப் பகுதியில் விலாசம் தேடி வரும் வெளி நபர்களும், பொதுமக்களும் முகவரியை சரியாக அடையாளம் காண முடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே, இங்குள்ள அனைத்துப் பலகைகளிலும் "மகாத்மா காந்தி சாலை' என்றே குறிப்பிட, பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.